நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா நகரசபைக்கு போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள 21 நகரசபை உறுப்பினர்களை வரவேற்பதற்கு நகரசபையில் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்காக 3மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக சபை இடம்பெறவில்லை இதன் காரணமாக எவ்வித புனரமைப்புப்பணிகளும் இடம்பெறவில்லை. தற்போது அதி நவீன முறையில் புனரமைப்புப்பணிகள் இடம்பெற்று வருகின்றது.
சபையின் புனரமைப்புப்பணிகளுக்காக நவீன மலசலகூடம் உட்பட இரண்டு மில்லியன் ரூபாய்களும் பொருட்கள் மற்றும் தளபாடம், நவீன் தொடர்பாடல் கருவி என்பன ஒரு மில்லியன் ரூபாவிற்கும் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தமாக மூன்று மில்லியன் ரூபாவில் தற்போது நவீன முறையில் நகரசபை புனரமைப்புப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், 21 நகரசபை உறுப்பினர்களையும் வரவேற்பதற்கு நகரசபை தயராகிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.






