மட்டக்களப்பில் ஒரே சூலில் மூன்று குழந்தைகளைப் பெற்ற இளம் தாய்!!

940

 
மட்டக்களப்பு தாழங்குடா பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார் .

தாழங்குடா கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் காயத்திரி என்ற (வயது 26) என்ற பெண் தலைபிரசவத்தில் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை நேற்று பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குறித்த கர்ப்பிணி தாய்க்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம் இந்த மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மூன்று குழந்தைகளில் முதல் பெண் குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையுடனும், இரண்டாவது ஆண் குழந்தை 1 கிலோ 800 கிராம் எடையுடனும், மூன்றாவது ஆண் குழந்தை 1 கிலோ 540 கிராம் எடையுடனும் பிறந்துள்ளது.

தாயும் மூன்று குழந்தைகளும் சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலை விடுதி வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.