வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் கிளிநொச்சி ப குதியிலிருந்து இரண்டு கிலோ 117 கிராம் கேரள கஞ்சாவினை எடுத்து வந்த நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சிப் பகுதியிலிருந்து மாவத்தகமவிற்கு கொண்டு செல்வதற்கு 2கிலோ 117கிராம் கேரளா கஞ்வினை எடுத்து வந்த நபர் ஒருவரை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரள கஞ்சாவினை எடுத்த வந்த மாவத்தகம பகுதியைச் சேர்ந்த (27வயதுடைய முகமட் அக்பா) என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.






