யாழ். கொடிகாமம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி நபரொருவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவசிகுளத்தைச் சேர்ந்த சகாயநாதன் விஜிதரன் (றமணன்) எனும் 32 வயதான நபரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் காணாமல்போயுள்ள நபரின் தாயார் சகாயநாதன் மனோரஞ்சிதமலர் தெரிவிக்கையில்,
எனது மகன் அண்மையில் தான் திருமணம் செய்தார். கடந்த மாதம் 22ஆம் திகதி வீட்டிற்கு வந்துவிட்டு வேலைக்குச் செல்வதாக்க கூறி சென்றார்.
எனினும் அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. சம்பவ தினமன்று மாலை இறுதியாக அவரது நண்பர் ஒருவரிடம் தொலைபேசியினூடாக கதைத்தார்.
அவர் காணாமல் போன சம்பவத்திற்கு பின்னர் அவர் கதைத்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினையேற்படுத்தி கதைத்த போது தான அழைப்பெடுக்கவில்லை என கூறி நண்பர் அழைப்பினை துண்டித்தார்.
இதனால் அவரது நண்பர்கள் மீது எமக்கு சந்தேகமாகவுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.






