திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

656

 
சிலாவத்துறை பிரதான வீதி அல்லிராணிக்கோட்டைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியின் உரிமையாளர் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டு சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதையடுத்து குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே பாய்ந்து தப்பியுள்ளார். எனினும், குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீயில் எறிந்துள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வந்த சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.