வவுனியா புகையிரதநிலைய வீதியில் விபத்து : பெண்ணொருவர் படுகாயம்!!

579

 
வவுனியா புகையிரதநிலைய வீதி, இலங்கை வங்கிக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட 58 வயதுடைய பெண்ணொருவர் விபத்துகுட்பட்டுள்ளார்.

இவர் வவுனியா கரப்பன்காட்டுப் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்றும், இவர் மீது மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டதென்றும் அறியமுடிகின்றது.

இந் நிலையில், அவர் தற்பொழுது வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பந்தமான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.