உயிருக்கு போராடும் தங்கையின் கன்னத்தில் முத்தமிடும் சகோதரன் : மனதை உருக்கும் புகைப்படம்!!

655

 
சிரியா போரில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடும் தனது தங்கையிடம் அன்பை வெளிப்படுத்தும் வகையில் கன்னத்தில் முத்தமிடும் சகோதரனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சிரியாவின் பிரதான நகரமான டூமாவிலுள்ள ஒரு மருத்துவமனையின் ரேடியோகிராஃபி அறையில் மனதை உருக்கும் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் சிரியா மக்கள் படும் இன்னல்கள் புகைப்படங்களாக இணையத்தில் வெளியாகியவாறு இருப்பது உலகெங்கும் உள்ள மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஐ.நா.சபை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 34 பேர் உயிரிழந்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.