வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் இளம் குடும்பத்தினரின் ஒன்பது மாத ஆண் குழந்தைக்கு சுகயீனம் காரணமாக இன்று காலை வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு வழங்கப்பட்ட பாணி மருந்தை இன்று இரண்டு தடவை குழந்தைக்கு வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு அதிக வயிற்றோட்டம் ஏற்பட்டு மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றதும் அங்கிருக்கும் வைத்தியர் தனது கடிதம் ஒன்றுடன் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
பொதுவைத்தியசாலைக்கு குழந்தை கொண்டு சென்றதும் வைத்தியர்கள் இரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கியும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணித்துள்ளது.
இச்சம்பவத்தை போன்று இதே தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குழந்தை ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






