வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் சாதனை!!

661

வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்தினால் இடம்பெற்ற பாடல் நயத்தல் போட்டியில் (18வயதுக்குட்பட்ட) முதலாமிடத்தினை பெற்று அகில இலங்கை ரீதியிலும் முதலாமிடத்தினை பெற்று வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரி மாணவி சற்குணராஜா ஜீவநந்தினி வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (05.03.2018) இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பாடல் நயத்தில் போட்டியில் முதலாமிடத்தினை பெற்றமைக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ்களை அமைச்சர் அமைச்சர். எஸ்.பீ.நாவின்ன வழங்கி வைத்தார்.

சற்குணராஜா ஜீவநந்தினி வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்று வருகின்றார். இவருடைய விடா முயற்சியினால் இச் சாதனையினை படைத்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.