மன்னாரில் இருந்து வவுனியா கோமராசன் குளத்திற்கான பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்,
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து இலங்கை அரசினால் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ள அவரச காலச் சட்டத்திற்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவிருந்த வவுனியா கோமராசன்குளத்திற்கான பாதயாத்திரை மற்றும் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவிருந்த பாதயாத்திரை ஆகியன மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி. இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.03.2018) காலை 10 மணிக்கு கோமரசன்குளம் கல்வாரித் திருத்தலத்தில் திருச்சிலுவைப்பாதையும் திருப்பலியும் இடம்பெறும்.
மற்றும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.03.2018) அன்று காலை 8.30 மணிக்கு ஓலைத்தொடுவாய் கர்த்தர் திருத்தலத்தில் திருச்சிலுவைப்பாதையும் திருப்பலியும் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.






