வவுனியாவில் அம்புலன்ஸ் சாரதிகள் பணிபகிஸ்கரிப்பு!!

607

வவுனியாவில் அம்புலன்ஸ் சாரதிகள் இன்று (07.03.2018) பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கத்தினைச் சேர்ந்த சாரதிகள், வட மத்திய மாகாண சுகாதார திணைக்கள சாரதிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை கண்டித்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் அம்புலன்ஸ் சாரதிகளின் பணி பகிஸ்கரிப்புக்கு ஆதரவாக வவுனியா உட்பட வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தை சேர்ந்த 222 சாரதிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்வர்கள் அநுராதபுர மாவட்ட சுகாதார திணைக்களம் சார்ந்த 30 சாரதிகளுக்கு வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதை தொடர்ந்து இடமாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும், அம்புலன்ஸ் மற்றும் சுகாதார திணைக்களம் சார்ந்த வாகனங்களின் சாரதிகளை நிரந்தரமாக சுகாதார சேவைக்குள் உள்வாங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

அத்துடன் அநுராதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சுகாதார திணைக்களத்தை சார்ந்த 11 சங்கங்கள் அம்புலன்ஸ் சாரதிகளின் பணிபகிஸ்கரிப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அம்புலன்ஸ் சாரதிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டாலும் அவசர சேவைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.