வன்முறைகள் வெறுப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது : சனத் ஜயசூரிய!!

958

இலங்கைக்குள் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வெறுப்பும், அருவருப்பும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சனத் ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.

நாட்டிற்குள் நடந்து வரும் வன்முறை சம்பவங்களை முழுமையாக கண்டிப்பதாகவும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை மக்களை அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாகவும் அனைவருடன் ஐக்கியமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.