வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு!!

298

 
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் வவுனியாவில் முழுக் கதவடைப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்தது

இதற்கு வவுனியா நகர பள்ளிவாசல் நிர்வாகம், வவுனியா வர்த்தக சங்கத்திடம் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், ஆதரவு வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நாளைய தினம் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுக்கும் நோக்கில் இன்றைய தினம் வவுனியா நகர பள்ளிவாசலுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.