வவுனியாவில் நாளை கடையடைப்பா?

508

வவுனியாவில் நாளைய தினம் கடையடைப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு வவுனியா நகரப்பள்ளிவாசல் வர்த்தகர் சங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.

எனினும் இது தொடர்பாக இன்று (08.03.2018) வர்த்தகர் சங்கத்தில் சங்கப்பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாளைய தினம் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரப்பள்ளிவாசலினால் நாளை (09.03.2018)வவுனியாவில் கடையடைப்புப்போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு வர்த்தகர் சங்கத்திடம் அனுமதி கோரப்பட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது நாட்டில் அவரசகாலச்சட்டம் நடைமுறையிலுள்ள காரணத்தினாலும் வவுனியாவில் மூவின மக்களும் செறிந்து வசித்து வருவதையும் கருத்திற்கொண்டு வர்த்தகர் சங்க பிரதிநிதிகளின் இன்றைய கலந்துரையாடலுக்குப்பின்னர் நாளைய தினம் கடையடைப்பு மேற்கொள்வதில்லை எனத்தீர்மானித்துள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்தார்.