வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 90 வயதுடைய மூதாட்டி கௌரவிப்பு!!

547

 
வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு குருமன்காடு காளி கோவில் வீதியில் வசித்து வரும் 90 வயதுடைய ஓய்வு நிலை ஆசிரியரான இராசம்மா நாகலிங்கம் என்பவர் இன்று (08.03.2018) காலை 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் தமிழ் விருட்சம் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன், கிராம சேவையாளர்கள், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.