வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வடிகாலமைப்பு சீராக்கப்படாமையால் அந்தப் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதுடன் அதிலிருந்து நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்திலேயே தற்போது பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. புதிய பேருந்து நிலையத்தின் முதன்மை வாயிலிலுள்ள வடிகால் அமைப்பு சீரான முறையில் தண்ணீர் வடிந்து செல்வதற்கு ஏற்றவகையில் காணப்படவில்லை.
இதனால் அதில் தண்ணீர் தேங்கிக்காணப்படுவதுடன் காலை மற்றும் மாலை வேளைகளில் நுளம்பு அப்பகுதியில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்து இவற்றைச் சீர் செய்து பயணிகளின் ஆரோக்கியத்துக்கு உதவ வேண்டும் என்று குறித்த பேருந்து நிலையத்துக்கு வந்து தினமும் போக்குவரத்தில் ஈடுபடும் பயனிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






