வவுனியாவில் இன்று காலை 9.30 மணியளவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம் சுற்றுவட்ட வீதியிலுள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எல்.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.சாமுவேல் ஜானகி (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக நிதி மற்றும் முகாமைத்துவத் தலைவர்) மற்றும் ஜான்சிலா மஜித் (முல்லைத்தீவு பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்) ஆகியோர் கலந்துகொண்டதுடன்,
வவுனியா பொலிஸ் திணைக்கள சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச திணைக்களப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.