வவுனியாவில் இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

1218

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ 800கிராம் கேரள கஞ்சாவுடன் இன்று அதிகாலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு கிலோ 800கிராம் கேரளா கஞ்சாவுடன் புல்மோட்டைப் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த நுவான் தர்சன என்ற 38 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவரை இன்று மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.