வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நேற்று இரவு 8 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை 4 மணியளவில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் மெனிக்பாம் பகுதியிலிருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேராக செட்டிகுளம் கல்லாற்றுப்பாலத்தில் விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையிலிருந்து காவு வண்டிகள் சென்று அவர்களை ஏற்றிச் சென்றுள்ளது.
இவ்விபத்தில் கல்லாறு வேப்பங்குளம் செட்டிகுளத்தைச் சேர்ந்த செல்வராசா நாகராசா வயது 33 என்பவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த ஏனையவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.