வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் பலி!!

538

வவுனியா புளியங்குளத்தில் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று (09.03.2018) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இரவு 8 மணியளவில் புளியங்குளம் பகுதியில் வயல் ஒன்றிற்குள் பன்றியை வேட்டையாடுவதற்காகச் சென்ற ஒருவர் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் அதை இயக்கிய நபரான நெடுங்கேணியைச் சேர்ந்த சிதம்பரம் விஜய் என்ற 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.