மாடி வீட்டிலிருந்து தவறி வீழ்ந்த நபர் பரிதாபமாகப் பலி!!

534

 
மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் பெயின்ட் பூச மாடி வீட்டின் உயரத்திற்கு ஏறிய ஒருவர் தவறி கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் பாண்டிருப்பு-02 ஐ சேர்ந்த ஆறுமுகம் தயாபரன் (வயது 56) என்பவர் பெயின்ட் பூசிக் கொண்டிருந்த போது தவறுதலாக உயரத்திலிருந்து கீழே விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் மாடி வீட்டின் உயரத்தில் நின்று வேலை செய்தமையினாலே இந்த பரிதாபகரமான விபத்து நேர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.