வவு­னி­யா­ புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட பாதசாரிக் கதவை!!

975

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையால் நேற்று முன்தினம் (09.10.2018) வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு முன்னால் பாதசாரிக் கடவை அமைக்கப்பட்டது.

புதிய பஸ் நிலையமானது A9 முதன்மை வீதியில் அமைந்திருப்பதால் அந்தப்பகுதி வாகன போக்குவரத்து நிறைந்த இடமாக காணப்படுகின்றது.

இந்தப் பகுதியில் கடவை இல்லாமல் பல விபத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன் பயணிகள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்களிலும் முன்னர் செய்தி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.