பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி துபாயில் மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது.
மும்பை கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அவருக்கு அரசு மரியாதையும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தில் இன்று மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் தமிழ் திரைப்பிரபலங்கள் பாக்யராஜ், கார்த்திக், மனோபலா உள்ளிட்டோர் பல திரைப்பிரலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் நடிகர் அஜித் அஞ்சலி செலுத்தினார். அஜித்துடன் அவரது மனைவி ஷாலினியும் அஞ்சலி செலுத்தினார்.
பின்னனி பாடகி பி.சுசிலா, நடிகை மீனா ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.