பூட்டிய அறைக்குள் இருந்து 21 வயது இளைஞனின் சடலம் மீட்பு!!

905

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பலாச்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 21 வயதான இளைஞனின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாச்சோலை முதலாவது குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் நிமலேந்திரன் பிரசாந்த் (வயது 21) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.

கூலித் தொழிலாளியான இவர் பெற்றோருடனும், சகோதரர்களுடனும் வசித்து வந்த நிலையில் அவ்வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் நீண்ட நேரமாகியும் வீட்டின் அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்த நிலையில், அறையைத் திறந்து பார்த்தபோது குறித்த இளைஞன் சடலமாக கிடப்பதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்து சடலம் மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.