நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்கு தீவைப்பு!!

953

 
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள், கந்தளாய் பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளுக்கு கூரைகள், சிவிலிங் வேலைகள் போன்றவற்றினை தங்கி இருந்து செய்துவந்துள்ளனர்.

வாகனத்தினை வழமை போன்று வீதியில் நிறுத்தி வைத்து விட்டு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலே அதிகாலை வேளையில் லொறிக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.