வவுனியாவில் இன்று(16.03.2018) மாலை பெய்த கடும் மழை காரணமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் அலுவலகப்பணியாளர்கள் பெரும் அவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட வடிகால் சீர் இன்மை காரணமாகவே மழை வெள்ளம் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளதாகவும் கடந்த வருடம் பெய்த கடும் மழையினாலும் இப்பகுதிக்குள் மழை வெள்ளம் அலுவலகத்திற்குள் சென்றுள்ளது எனினும் அப்போது இவற்றை சீர் செய்து தருமாறு கோரியபோதும் இன்று வரையில் சீர் செய்யப்படவில்லை இதன்காரணமாகவே மழை வெள்ளம் மாவட்ட செயலகத்தின் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளதாகவும் அலுவலக உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாவட்ட செயலகத்தில் பணிபுரிபவர்கள் மழை வெள்ளத்தில் பணியாற்ற வேண்டிய நிலையில் மாவட்ட செயலகத்திற்குள் பௌத்த விகாரை அமைப்பதற்கு அரசாங்க அதிபர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றார்.
அலுவலக உத்தியோகத்தர்களுக்கு நிரந்தரக் கட்டடம் இன்றியும் வாகனத்தரிப்பிட வசதிகள் அற்ற நிலையில் தற்போது மாவட்ட செயலகத்திற்குள் பௌத்த விகாரை தேவையா எனவும் உத்தியோகத்தர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.










