துடுப்பு படகு போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்களின் விநோத பயணம்!!

1166

இலங்கையில் நடக்கும் சர்வதேச துடுப்பு படகு போட்டியில் பங்கேற்க தனுஷ்கோடியில் இருந்து இந்திய கடற்படை வீரர்கள் இருவர் துடுப்பு படகில் தலைமன்னார் சென்றனர்.

மும்பையை சேர்ந்த இந்திய இராணுவத்தில் கமாண்டராக பணி புரியும் தாதா கட்டாராய் சவுத்திரி, இந்திய கடற்படை வீரர் ராஜர்ஜி பவுல் இருவரும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து நேற்றுக் காலை 9:00 மணிக்கு துடுப்பு படகில், இலங்கை தலைமன்னாருக்கு பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் 33 கி.மீ., தூரமுள்ள தலைமன்னாருக்கு இரவு 12:00 மணிக்குள் செல்ல வாய்ப்புள்ளது என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.



இருவரின் பாதுகாப்புக்காக தனுஷ்கோடி முதல் இந்திய எல்லை வரை இந்திய கடற்படைரோந்து படகு, கடலோர காவல் படையின் ஹோவர்கிராப்ட் கப்பலில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன் பின் இலங்கை எல்லையில் இலங்கை கடலோர காவல் படையினர் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.