முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) கட்சியான தமிழர் ஐக்கிய சுகந்திர முன்னணியின் வெற்றி பெற்ற பிரதேசபை பிரதிநிதிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது
அதன்போது வருங்கால மாகாணசபை தேர்தலுக்கான பணி தொடர்பான விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் வடமகாணத்தில் தங்கள் கட்சிக்காக எப்போதும் போராடுகின்ற அக்கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமாகிய பொன்னுத்துரை அரவிந்தனை கௌரவப்படுத்தும் விதமாக கட்சியின் எதிர்காலம் குறித்தும் அவரின் பதவி உயர்த்தப் பட்டு இன்றிலிருந்து கட்சியின் சர்வதேச இணைப்பாளராக ஏக மனதுடன் பிரதிநிதிகள் மற்றும் கட்சித்தலைவர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
எனவே அவர் இன்றிலிருந்து சர்வதேசம் மற்றும் வவுனியா தொடர்பான அனைத்து கட்சிப்பணிகளையும் மேற்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கட்சியின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.