வவுனியா தமிழ் கோட்டத்தின் 2018ம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு!!

768

 
வவுனியா தமிழ் கோட்டத்தின் 2018 மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு நேற்று (16.03.2018) வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜா தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை, இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வில் சைவப்பிரகாச ஆரம்பப் பள்ளி மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. இவ் விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் ஓய்வு பெற்ற முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் அன்ரன் சோமராஜா, வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபரன், உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் இ.ராஜசீலன், தேசிய கல்வியல் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி த.ம.தெய்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.