15 வயது சிறுமி மீது காதல் : கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்!!

452

இந்தியாவில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் கடப்பாவை சேர்ந்தவர் யண்ணம் விஜய் குமார் (18). இவர் அதே பகுதியை சேர்ந்த மனிஷா (15) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்த நிலையில் இதை மனிஷாவின் மாமா ரெட்டி பார்த்துள்ளார்.

விஜய் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த காதல் ரெட்டிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மனிஷாவை அடித்துள்ள ரெட்டி, விஜய்யையும் அடித்து இனி மனிஷாவை சந்திக்கக்கூடாது என மிரட்டியுள்ளார். ஆனாலும் காதல் ஜோடிகள் தங்கள் சந்திப்பை நிறுத்தவில்லை.

இந்நிலையில் கடந்த 10-ஆம் திகதி அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் விஜய் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து விஜய்யின் உறவினர் ஜெயசந்திரா கூறுகையில், 10-ஆம் திகதி மனிஷா, விஜய்க்கு போன் செய்து தனது வீட்டுக்கு வர சொல்லியுள்ளார்.

ஆனால் மனிஷாவின் மாமாவும், மாற்றாந் தந்தையும் மனிஷாவை மிரட்டி போன் செய்ய வைத்துள்ளனர்.

பின்னர் அங்கு விஜய்யை கொடூரமாக இருவரும் தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை தண்டவாளத்தி போட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்து வரும் அதிகாரி ஸ்ரீனிவாசலு கூறுகையில், இரும்பு கம்பியால் அடித்து விஜய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விஜய்யின் தாய் உள்ளிட்ட குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் மனிஷாவின் மாமா மற்றும் தந்தையை கைது செய்துள்ளோம்.

சாதிப் பிரச்சனையால் இச்சம்பவம் நடந்ததா என விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.