பேஸ்புக் கணக்குகளை முடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை!!

605

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்களை வெளியிடும் பேஸ்புக் கணக்குகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான கணக்குகளை நிரந்தரமாக நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் அரசாங்கத்திடம் வாக்குறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விடுத்த கோரிக்கைகளுக்கமைய இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திடம், அரசாங்கம் விடுத்த பல கோரிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

எப்படியிருப்பினும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.