பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு அனுமதி அளித்த பிசிசிஐ!!

323

இந்திய கிரிக்கெட் அணி, பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது.

மும்பையில், இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களை நிர்ணயிக்கும் பி.சி.சி.ஐ அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த தொழில்நுட்ப பிரிவு தலைவர் சவுரவ் கங்குலி, தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி, நிர்வாக பொது மேலாளர்கள் சபா கரீம் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, அக்டோபர் மாதம் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்காக ராஜ்கோட் அல்லது ஹைதராபாத்தில் உள்ள மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் நிர்வாகத்தினரின் ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு இந்த போட்டி நடைபெற உள்ளது.