மனைவி, மாமனாரை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்!!

535

இந்தியாவில் மனைவி, மாமனார் மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் நகரை சேர்ந்தவர் முகமது உஸ்மான், இவரின் மனைவி சல்மா பேகம் (27). பேகமுக்கு முகமது இரண்டாவது கணவராவார், முதல் கணவருடன் அவருக்கு அய்னா மர்சியா (6) என்ற மகள் உள்ளார்.

முகமது உஸ்மான் சல்மாவை மணந்த பின்னரே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார், அதற்கு முன்னர் அவரின் பெயர் சவுரவ் சவ்ரசியா. இந்நிலையில் உஸ்மானின் கடையை விற்று தனது பெயரில் நிலம் வாங்க சல்மா வற்புறுத்தியுள்ளார்.

தொடர்ந்து மனைவியின் விருப்பத்தை உஸ்மான் நிறைவேற்றிய நிலையில், நேற்று இருவருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. கோபத்தில் உஸ்மான் விரலை சல்மா கத்தியால் வெட்ட, ஆத்திரமடைந்த உஸ்மான் மனைவியை குத்திக் கொலை செய்தார்.

இதை தடுக்க வந்த மாமனார் முகமது யூனஸ் (65)-ஐயும் கத்தியால் குத்தியதுடன், சிறுமி அய்னாவையும் கத்தியால் குத்தினார். மூவரின் கழுத்தையும் கத்தியால் அறுத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல வெளியில் சென்றுள்ளார்.

இந்நிலையில் சல்மாவின் சகோதரி அவர் வீட்டுக்கு வந்த பார்த்த போது மூவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட, மூன்று சடலங்களையும் கைப்பற்றிய அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் உஸ்மானை கைது செய்தனர்.

நடந்த அனைத்தையும் பொலிசாரிடம் அவர் வாக்குமூலமாக அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.