சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்றிணைந்து போராடுவோம் என்ற வாசகத்துடன் வவுனியாவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிங்கள தமிழ் முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களே ஜாதி பேதமின்றி உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து போராடுவோம் என வவுனியாவின் முக்கிய இடங்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சுவரொட்டிகள் இன்று (21.03.2018) ஒட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களே ஜாதி பேதம் என்பது ஒரு சதித்திட்டம் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம் என்ற வாசகம் தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








