என் கணவர் இறந்துவிட்டாரா :-25 நாட்கள் கழித்து கதறிய புதுப்பெண்னின் சோகக் கதை!!

667

இந்தியாவில் பரிசுப்பொருளில் இருந்த வெடிகுண்டு வெடித்து புதுமாப்பிள்ளை இறந்த நிலையில் 25 நாட்கள் கழித்தே கணவர் இறந்தது புதுப்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சவுமியா சேகர் என்பவருக்கும், ரீனா சாஹா என்பவருக்கும் கடந்த மாதம் 18-ஆம் திகதி திருமணம் நடந்த நிலையில் 21-ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது தம்பதிக்கு தரப்பட்ட பரிசு பொருள் ஒன்றில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் சேகரும், அவர் பாட்டியும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ரீனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கணவர் இறந்தது குறித்து ரீனாவின் குடும்பத்தார் அவரிடம் கூறவில்லை.

இந்நிலையில் சேகர் இறந்து 25 நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்த பத்திரிக்கை மூலம், அதை ரீனா தற்போது தெரிந்து கொண்டு கதறி அழுதுள்ளார்.

பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை அறையில் ஐந்து மணிநேரம் அழுத நிலையில், அவரது குடும்பத்தார் ரீனாவை தேற்றியுள்ளனர்.

இந்த வழக்கு சம்மந்தமாக பொலிசார் சிலரை கைது செய்திருந்தாலும் முக்கிய குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.