வவுனியாவில் 154வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

418

 
வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் விரச்சாவடைந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகே இன்று (21.03.2018) காலை 8 மணிக்கு உயிர் நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 154வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வன்னி பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.எஸ்.தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிரி பர்னான்டோ, பொலிஸ் ஆட்சேர்ப்பு உதவியாளர் மல்லவகே , பொலிஸ் கண்காணிப்பாளர் வெல்கம,

கணக்காளர் ரவிச்சந்திரன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியாவிலுள்ள ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உயிர்நீத்த பொலிசாரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் , வவுனியா பொலிஸார் , சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும் பொலிஸாரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.