வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு!!

787

 
சர்வதேச வனாந்தர தினம் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசல் ஸ்தலத்தில் வவுனியா மாவட்ட வன அதிகாரி காரியலாயத்தினால் மாவட்ட வன அதிகாரி கே.கே.நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.

உலக வனாந்தர தினமத்தை முன்னிட்டு இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் சர்வதேச வனாந்தர தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதாரன பத்திரன, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், மேலதிக மாவட்ட செயலாளர் திரு.கமலேஸ்வரன், மாவட்ட கமநல உதவிப்பணிப்பாளர் ஆர்.விஜயகுமார், மாவட்ட பரிபாலகர் ஆர்.ரவிராஜ், உதவி மாவட்ட வன அதிகாரி எம்.ஏ.நபீஸ், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், அசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் மரநடுகையினையும் மேற்கொண்டனர்.