வவுனியாவிலும் தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் வெளியீடு!!

586

 
வவுனியாவிலும் தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வின் போதே வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வெளியிட்டு வைக்க முதல் பிரதிகளை பங்களாளிக் கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் புதிய சுதந்திரன் பத்திரிகை வழங்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை புதிய சுதந்திரன் பத்திரிகை வெளிப்படுத்தும் என இதன்போது பலரும் தெரிவித்தனர்.