வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை விவகாரம் : 26ம் திகதி இறுதி முடிவு!!

542

வவுனியா மாவட்டத்திற்கான இவ்வருடத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 26ஆம் திகதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளதாக மாவட்ட திட்டப்பணிப்பாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமாக இது இடம்பெறவுள்ளதுடன், பல தரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக வீதிகள் புனரமைப்பு, வீட்டுத்திட்டம், விவசாயம், தண்ணீர், குப்பை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் மாவட்ட செயலகத்திற்குள் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரை தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாகவும்,

ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன், வர்த்தக வாணிபத்துறை அமைச்சா ரிஷாட் பதியூதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், திணைக்களப்பணிப்பாளர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட திட்டப்பணிப்பாளரினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளாக மேலும் தெரிவித்தார்.