வவுனியா நகரசபையின் அதிரடி நடவடிக்கை!!

464

 
வவுனியாவின் நகர்ப் பகுதியில் நகரசபையின் அனுதியின்றி கட்டப்பட்ட வியாபார நிலையங்களின் கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன் கட்டட நிர்மாண வேலைக்கான உபகரணங்ளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியில் நகரசபையின் அனுமதி இன்றி கட்டப்பட்டு வரும் இரு கடைகளின் கட்டட வேலைகளை நிறுத்துமாறு கடந்த காலங்களில் பல முறை நகரசபையினால் எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நகரசபையின் இவ்வறிவுறுத்தல்களை ஊதாசீனப்படுத்தி குறித்த இரு வியாபார நிலையங்களிற்கான கட்ட வேலைகள் நடைபெற்று வந்ததை அடுத்து இன்று வவுனியா நகர சபை செயலாளரின் தலைமையில் குறித்த கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன் கட்ட வேலைகளிற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.