கணவனை கொடூரமாக கொன்ற மனைவி : ஆதாரங்களை அழித்து ஏமாற்றியது அம்பலம்!!

294

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெண் ஒருவர் தமது கணவனை கொடூரமாக கொலை செய்துவிட்டு பொலிசாரை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.

பெங்களூருவின் விஜயநகர் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜனவரி 17 ஆம் திகதி உமா என்பவர் தமது கணவரை வாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

பின்னர் ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு அதே மாதம் 21 ஆம் திகதி பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தாம் மகனுடம் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் தமது கணவரை மர்ம நபர்கள் எவரோ கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஜயநகர பொலிசார் குறித்த கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டதில், கொலை குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதன் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னரே சம்பவம் நடந்திருக்க வேண்டும் என தெரிய வந்தது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் உமாவை அழைத்து விசாரித்த பொலிசாரிடம் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

பெங்களூருவில் ரியல் எஸ்டேட் முகவராக இருக்கும் கணேஷ் என்பவரே உமாவின் கணவர். இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பல நாள் வாக்குவாதத்தில் முடிந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று அதேபோன்று வாக்குவாதத்தில் ஏற்பட்ட உமா ஆத்திரத்தில் வாளால் கணேஷை வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கணேஷ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். அடுத்த நாள் கொலைக்கு பயன்படுத்திய வாள், மற்றும் ரத்தக்கறை படிந்த உடைகளை ஒரு பைக்குள் எடுத்துக் கொண்டு தமது மகனுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு தமது தந்தையிடம் நடந்தவற்றை கூறி, பின்னர் ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துள்ளார்.

அதன் பின்னரே பொலிசாருக்கு உமா கொலை தொடர்பில் புகார் அளித்துள்ளார். தற்போது கொலை தொடர்பில் உமா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் அபிஷேக் மற்றும் உமாவின் தந்தை ராஜு ஆகியோரையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.