வெளிநாட்டு காதலனை தேடிய இலங்கை யுவதி பரிதாபமாக பலி : டெல்லியில் நடந்த கோரம்!!

725

தமிழகத்தில் காணாமல் இலங்கை பெண்ணொருவர் புதுடில்லியில் உயிரிழந்துள்தாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு – பெரம்பலூர் அதிகளில் முகாமில் இருந்து காணாமல் போன இலங்கைப் பெண்ணான 24 வயது ரம்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி முதல் ரம்யா காணாமல் போயிருந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் படியே குறித்தப் பெண் பெரம்பலூர் முகாமைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போய் இருப்பதாக முறைப்பாடு பதிவாகி இருக்கின்றமையும் டெல்லி பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

தமிழகத்திலிருந்து ரம்யா ஏன் புதுடில்லி சென்றார் என்பது குறித்து டெல்லி பொலிஸாரல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரம்யாவின் காதலன் இலங்கையில் இருந்து சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

அவரை சந்திக்க ரம்யா முடிவு செய்து இதற்காக அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி சென்னை சென்றுள்ளார்.

அங்கு ஒரு முகவர் மூலம் தனது பெயரை ஸ்ரீமதி ஹமீரா என மாற்றி போலியாக கடவுச்சீட்டு எடுக்க முயற்சித்துள்ளார். பின்னர், டெல்லி சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லவும் தயாராகி இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த போதுதான் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.