அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு!!

592

 
அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் இரு பிள்ளைகளும் இன்று அவர்களது உறவினர்கள் சகிதம் வட மாகாண ஆளுநரை சந்தித்து தந்தையின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளுடன் விசன் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு நிலைமையை கூறியிருந்தனர்.

இதனை செவிமடுத்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்விடயம் தொடர்பாக ஜனாபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.