போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மமதா. இவர் சென்னை சாலிகிராமத்தில் தங்கி தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார்.
இதில் போதிய வருமானம் இல்லாததால் ஏஜெண்டுகள் மூலம் குஷ்பூ என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்ற மமதா ஓராண்டு விசா மூலம் துபாயில் உள்ள ஒரு ஹொட்டலுக்கு நடனமாடுவதாக அவ்வப்போது சென்றுவந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த 20-ஆம் திகதி மம்தா துபாய் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஆதார் கார்டின் அடிப்படையில் சந்தேகப்பட்டு விசாரித்ததையடுத்து மமதா உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு பொலிசார் மமதாவை கைது செய்துள்ளனர்






