புற்றுநோயால் உயிருக்கு போராடும் சிறுவன் : பொலிசாக மாறிய நெகிழ்ச்சி தருணம்!!

648

இந்தியாவில் புற்றுநோயால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 7 வயது சிறுவன் தன் ஆசைப்படி ஒருநாள் பொலிஸ் இன்ஸ்பெக்டராக வாழ்ந்து பார்த்துள்ளான்.

மும்பை நகரை சேர்ந்த அர்பித் மண்டல் (7) என்ற சிறுவனுக்கு கடுமையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸ் இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும் என்ற அர்பித்தின் ஆசை மும்பை முலுந்த் பகுதி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒருநாள் பொலிஸ் இன்ஸ்பெக்டராக அர்பித் வாழ்ந்து பார்த்துள்ளான்.

அதன்படி காக்கி உடையணிந்து, இன்ஸ்பெக்டர் நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்து கோப்புகளை அர்பித் பார்வையிட்டான். இது சம்மந்தமான புகைப்படங்களை மும்பை பொலிசார் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து அர்பித் விரைவில் நோயிலிருந்து குணமடைய டுவிட்டரில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.