இந்தியாவில் நபர் ஒருவர் பள்ளி மாணவியை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியின் பக்தாவ்யூர் பகுதியை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, மாணவியை அவர் வீட்டின் அருகில் வசிக்கும் நபர் ஒருவர் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார்.
இதோடு மாணவியின் பெற்றோரை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார், இதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளியின் பெயர் மயங்க் (20) என தெரியவந்துள்ளது. அவரை கைது செய்யும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.






