வவுனியா பாவற்குளம் படிவம் 1 சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது அக்கிராம மக்களால் பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரால் நேற்று (24.03) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த குறிப்பிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்,
குறிப்பிட்ட கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர் தன்மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வு காரணமாக இவ்வாறான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளேன். அத்துடன் பாவற்குளம் படிவம் 1 கிராமத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற முறையில் நடுநிலையாக சேவையாற்றி வருகிறேன். என் மீதான பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டை முற்றுமுழுதாக நான் மறுக்கிறேன் என தெரிவித்தார்.
வவுனியா பாவற்குளம் படிவம் ஒன்றை சேர்ந்த கிராம மக்கள் நேற்றுமுன்தினம் (23.03) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வீட்டை முற்றுகையிட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பாவற்குளம் படிவம் 1 சேர்ந்த கிரம உத்தியோகத்தர் மீதும் புகார் தெரிவித்திருந்ததுடன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






