வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை வீசப்பட்ட கழிவுக் குப்பையிலிருந்து வவுனியா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவரின் முகவரியுடன் வெளிநாடு ஒன்றிலிருந்து அனுப்பிய பொதியின் கவர் ஒன்றுடன் சில கிழித்து வீசப்பட்டுள்ள பல்கலைக்கழக கடிதங்கள் குப்பைகளாக வீசப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக குறித்த வைரவப்புளியங்குளம் குளக்கட்டு பகுதியில் இனந்தெரியாதவர்களினால் வீசப்பட்டு வரும் குப்பைகளை கண்காணித்து வரும் இளைஞர்கள் விழிப்புணர்வுக் குழுவினரே இவ்வாறு வீசப்பட்டுள்ள குப்பைகளை மீட்டுள்ளபோது வவுனியா பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரியான ஒருவரின் முகவரியிடப்பட்டுள்ள வெளிநாடு ஒன்றிலிருந்து அவருக்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட பொதிகளும் பல்கலைக்கழகத்திற்குரிய சில ஆவணங்களுமே இவ்வாறு வைரவப்பளியங்குளம் குளக்கட்டுப்பகுதியில் இனந்தெரியாதவர்களினால் வீசப்பட்டுள்ளது.
குறித்த குளக்கட்டுப்பகுதியில் குப்பைகளுடன் பலரை கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இப்பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதிலும் இப்பகுதியில் குப்பைகள் வீசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






