வவுனியா மாவட்டத்தில் குற்றப்பணமாக சுமார் 16 இலட்சம் ரூபா அறவீடு!!

1005

வவுனியா மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு தண்டப்பணமாக 16 இலட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபா பெறப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எ.அசோக திலகரத்தின தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோத கள் மற்றும் சாராய விற்பனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் உட்பட கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த வருடத்தில் மாத்திரம் 507 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றிவளைப்பு சோதனைகளின் போது 2017ஆம் ஆண்டு மாத்திரம் 21 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.