பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது உண்மைதான் : ஷமி பரபரப்பு வாக்குமூலம்!!

538

மனைவி அல்லாமல் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்தது உண்மைதான் என பிசிசிஐ விசாரணை குழுவிடம் ஷமி ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக வலம் வந்த முகமது ஷமி மீது அவரது மனைவி சில பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மட்டுமின்றி, ஷமி சூதாட்டத்திலும் ஈடுபட்டதாகவும் அதற்கு தம்மிடம் ஆதாரம் இருப்பதாகவும் ஷமி மனைவி கூறியதால் இந்த விவகாரம் பிசிசிஐ கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில், நீரஜ் குமார் என்ற அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு ஷமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

அதில், மனைவி ஹசின் ஜஹான் அல்லாது வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஷமி ஒப்புக்கொண்டுள்ளார்.

குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த அலீஷ்பா என்ற பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் அவரை பார்க்கத்தான் துபாய் சென்றதாகவும் ஷமி தெரிவித்துள்ளார்.எனினும் அவரிடம் ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியதில்லை என ஷமி கூறியுள்ளதால் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையீடு இருக்காது என்றே கூறப்படுகிறது.
மேலும், இது ஷமியின் குடும்ப விவகாரம் என்பதால் கிரிக்கெட்டில் தொடர்ந்து பயணிக்க அவருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.